December, 2008 க்கான தொகுப்பு

சரிகாஷாக் கொலைக்குப் பிறகு,”ஈவ்-டீஸிங்” எதிராக அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 10000 ரூபாய் அபராதம் அல்லது ஒரு வருட சிறை தண்டனை அல்லது இவை இரண்டும் விதிக்கப் பட்டது. சட்டம் போட்டு விடுவதினாலே குற்றம் குறைந்து விடுவதில்லை.சமீபத்தில் ஆந்திராவில் ஆஸிட் ஊற்றப்பட்டிருக்கிறார் இருபத்திரண்டு வயதேயான, பொறியியல் கல்லூரி இறுதியாண்டு மாணவி ஸ்வப்னிகா. எத்தனை வக்கிரம், எப்படி ஒரு சிந்தனை, எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.தன்னை காதலிக்க மறுத்ததால், இப்படி ஒரு செயலில் இறங்கியுள்ளனர் அந்த கேவலமான [...]

‘அரிதரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும்நயத்தலரிது’ – இது,’அரியது எது? என்ற முருகனின் கேள்விக்கு ஔவையின் பதில். தகடூரை ஆண்ட அதியமான் ஔவைக்கு நெல்லிகனி கொடுத்தது,ஆத்திசூடி இவற்றின் மூலம் நமக்கு அறிமுகமானவர் இவர். ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர் என்றும்,பெண்பாற் புலவர்களை இந்த பெயரில் அழைததனர் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளன. மிக எளிமையாகவும்,சுருங்கவும் சொல்லுவதில் வல்லவர். வள்ளுவர் எழுதிய குறளை விடவும் சுருங்க [...]