‘இலக்கியம்’ பகுப்புக்கான தொகுப்பு

‘அரிதரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன்குருடுசெவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது ஞானமும் கல்வியும்நயத்தலரிது’ – இது,’அரியது எது? என்ற முருகனின் கேள்விக்கு ஔவையின் பதில். தகடூரை ஆண்ட அதியமான் ஔவைக்கு நெல்லிகனி கொடுத்தது,ஆத்திசூடி இவற்றின் மூலம் நமக்கு அறிமுகமானவர் இவர். ஔவையார் என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்தனர் என்றும்,பெண்பாற் புலவர்களை இந்த பெயரில் அழைததனர் என்றும் பல்வேறு செய்திகள் உள்ளன. மிக எளிமையாகவும்,சுருங்கவும் சொல்லுவதில் வல்லவர். வள்ளுவர் எழுதிய குறளை விடவும் சுருங்க [...]

காதலிக்கு…

Posted: நவம்பர் 20, 2008 by Arangaperumal in இலக்கியம், கவிதை
குறிச்சொற்கள்:, ,

காத்திருப்பதை அறிந்து களிப்புரவில்லை கசிந்துருக மனமிருந்தும் காலம் கனியவில்லை காத்திருப்பதும் எதிர்பார்த்துருப்பதும் சுகமானதுதான் விளைவுகள் சாதகமாகுமென்றால். ஒவ்வொரு விடியலிலும் சாதிப்பதைப் பற்றி ஆயிரம் கனவுகள் ஒவ்வொரு இரவிலும் சலிப்பான நினைவுகள் மட்டுமே நிச்சயம். நொறுங்கிய நினைவுகள் நெருங்கி வரும்போது தடுத்தாட் கொள்வது உன் நினைவுகள் மட்டுமே உணர்வுகளால் தாக்குன்டதால் வார்த்தைகளுக்கு  இங்கு பஞ்சம் இதை உணர வேண்டும் உனது நெஞ்சம். – அரங்கப்பெருமாள்